இளமை இரசனை!

சில நினைவுகள் என்றும் இனித்துக்கொண்டே இருக்கும்!ஒரு நாள் நடந்த சுவாரசியச் சம்பவம் இப்பொழுதும் இனிக்கிறது.அன்று அச்சகத்தில் இரவுப்பணியில் ஈடுபட்டிருந்தோம்.அன்றைய இரவில் நான் ஒரு கவிதையை எழுதி மறு நாள் காலையில் வேலைக்கு வரும் நண்பியின் மேசையில் வைத்து விட்டேன்,மறு நாள் வேலைக்கு எல்லோரும் வந்து சேர்ந்தனர்.பின்னர் என்னிடம் வந்த நண்பி அந்தப்பொறுக்கி கவிதை எழுதி என் மேசையில் வைத்திருக்கிறான் என்றார்.யார் அது என்று நான் கேட்டேன்.அவாவை லவ் பண்ணுவதாக ஒருவன் கூறி வந்தான்.அவனைக்காட்டி அவன்தான் என்றார்.இல்லை இல்லை நான்தான் எழுதி வைத்தேன் கவிதை எப்படி என்றேன்.உடன் தன் இருப்பிடத்திற்கு சென்றவர் கசக்கி எறிந்த கவிதையை எடுத்து வாசித்து விட்டு நன்றாக இருக்கிறது என்றார்.மறக்குமா நெஞ்சம்?

போளை விளையாட்டு!

சிறுவர் முதல் இளைஞர் வரை போளை அடித்து விளையாடிய காலம் அது.வீட்டு வளவுகpolaiளுக்குள்ளும் தெருவோரங்களிலும் வயல் வெளிகளிலும் போளை அடித்து விளையாடிய காலம் மறக்க முடியாதது.யாழ்,மண்ணில் இடப்பெயர்வுகளுக்கு முன் வாழ்ந்த காலம் என்பது மிகவும் வித்தியாசமானது.நவீன வசதிகள் ஏதும் அன்று இல்லாத போதும் கிராம வாழ்க்கை என்பது மிகவும் குதூகலமாகவே இருந்தது.அதிகாலையில் எழுந்து நண்பர்கள் கூடி போளை அடித்து விட்டே பள்ளிக்கூடம் செல்வோம்.பள்ளிக்கூடம் விட்டு வரும் வழியிலும் போளை அடிப்போம்.இவையெல்லாம் இப்போது நினைக்கும்போது அந்த பொன்னான வாழ்க்கையை இழந்து விட்டோம் என்று சொல்ல முடியவில்லை பிரிந்து விட்டோம் என்பதே சரியாக இருக்கும்.உங்களுக்கும் இந்த ஏக்கம் இருக்கும் என்ற நோக்கத்தோடு இப்பதிவு.

பிரிவும் சந்திப்பும்!

எம் நாட்டின் பிரச்சனையால் நாட்டுக்குள் இடம்பெயர்ந்தவர்களும் நாட்டை விட்டு புலம் பெயர்ந்தவர்களு1053372_818940418197784_5437554891766222598_oம் இலட்சக்கணக்கில் உள்ளனர்.நானும் இடம்பெயர்ந்தும் புலம்பெயர்ந்தும் பல ஆண்டுகள்  ஆகிவிட்டன.இந்த இடப்பெயர்வுகளால் நாம் பிரிந்ததும் இழந்ததும் ஏராளம்.இந்த நிலையில் ஒரு திருமண விழாவில் ஊரவர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.உறவுகளுக்கே உறவுகளை தெரியாத நிலையையும் நண்பர்களுக்கே நண்பர்களை தெரியாத நிலையையும் அயலவர்களுக்கே அயலவர்களை தெரியாத நிலையையும் காண முடிந்தது.நானும் பல வருடங்களின் பின் எனது பள்ளிக்கூட நண்பியை சந்தித்துக் கொண்டது விபரிக்க முடியாத ஒரு மகிழ்ச்சியை கொடுத்தது.நானே சிலரை சந்தித்து அறிமுகப்படித்திக் கொண்டதும்,சிலர் வந்து தங்களை எனக்கு அறிமுகப்படுத்திக் கொண்டதும் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது.எம் ஊரவர்களை பல வருடங்களின் பின் சந்தித்து அறிமுகப்படுத்தும்போது ஒவ்வொருவரின் முகங்களிலும் சோகங்கள் இழையோடியதை காண முடிந்தது.எம்மை எல்லாம் இணைக்கும் பாலமாக சமூக வலைத்தளங்கள் இருப்பது ஒரு வகையில் சந்தோஷமே!மறவோம் சந்திப்போம்.

வால்நட்சத்திரத்தில் இறங்கி வரலாற்று சாதனை!

141112150024_philae_512x288_pa_nocreditசூரியக் குடும்ப அமைப்பின் ஊடாக சுமார் 10 ஆண்டுகள் பயணித்த பின்னர், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின், விண்கலன் ரொசெட்டாவின் ஆய்வுக்கலனான, பிலே கலன், வால் நட்சத்திரத்தின் மீது இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இது போல வால் நட்சத்திரத்தின் மீது இறங்கிய முதல் விண்கலன் இதுதான்.

சில நிமிடங்களுக்கு முன்னர்தான், இந்த இரண்டு கிலோமீட்டர் அகலமுள்ள வால்நட்சத்திரத்தின் பனிக்கட்டிகள் படர்ந்த மேற்பரப்பின்மீது இந்த பிலே ஆய்வுக்கலன் பத்திரமாக இறங்கியது என்ற சமிக்ஞையை விண்வெளி விஞ்ஞானிகள் அந்தக்கலனிடமிருந்து பெற்றனர்.

இந்த விண்கலனும், வால் நட்சத்திரமும், மணிக்கு 66,000 கிலோ மீட்டர் வேகத்தில் விண்வெளியினூடாக பறந்து கொண்டிருக்கையில் இந்த நுட்பமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பேஸ்புக் பயன்படுத்தி சிக்கிய திருடன்!

திருடப் போனால் திருட்டோடு நிற்க வேண்டும், அங்கு பேஸ்புக் எல்லாம் பயன்படுத்தினால், சிக்கலில் மாட்டவேண்டியதுதான் !freedomஅமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் திருடன் ஒருவன் , திருடிய வீட்டில், கணினியை உபயோகித்து, தனது பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்திவிட்டு, பின்னர், ஃபேஸ்புக் கணக்கை ‘லாக் அவுட்’ செய்ய மறந்ததை அடுத்து காவல் துறையிடம் சிக்கியுள்ளான்.திருடிய வீட்டின் உரிமையாளரின் கணினியில் தனது ஃபேஸ்புக் கணக்கை திறந்து பார்த்த அந்த நபர் பின் கணக்கை மூட செய்ய மறந்துள்ளான்.அந்த திருடிய நபரான நிகோலஸ் விக் என்பவரின் ஃபேஸ்புக் கணக்கில் இருக்கும் ‘ப்ரோஃபைல் பிக்சர்’ அதாவது அவரது புகைப்படத்தை வைத்து அந்த வீட்டின் உரிமையாளர் வீதியில் அந்த நபரை அடையாளம் கண்டுள்ளார்.அந்த வீட்டுக்குள் சென்று கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்களைத் திருடியதாகவும், அந்த வீட்டில் உள்ள கணினியைப் பயன்படுத்தித் தனது ஃபேஸ்புக் கணக்கில் நுழைந்ததாகவும் நிகோலஸ் விக் ஒப்புகொண்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.குற்றம் நிரூபிக்கப்பட்டல் அந்த நபருக்கு பத்து ஆண்டு கால சிறை தண்டனை வழங்கப்படலாம்.

சென்னையில் காணாமல் போன மகன் மீட்பு!

இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக சென்னை வாழ் இலங்கைத் தமிழர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த தனது 12 வயது மகனை அவனது தந்தையார் பொலிசாரின் உதவியுடன் மீட்டுள்ளார்.paithranகுறித்த சம்பவம் தொடர்பில் தமிழக ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 44). என்ற ஈழத் தமிழரான இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். மனைவி இறந்து விட்டார்.இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக குறித்த சிவபாலன், சென்னை வாழ் இலங்கைத் தமிழர் ஒருவரிடம் தனது மகன் ஒருவனை ஒப்படைத்திருந்தார்.இதன்போது குறித்த சிறுவன் காணாமல் போய்விட்டதாக சென்னை வாழ் இலங்கைத் தமிழர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில்,சிவபாலன்,  தனது 12 வயது மகனை மீட்டுத் தரும்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 23ஆம் திகதி புகார் அளித்தார்.இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க பொலிசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்படி, நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. பொலிசார் இலங்கை தமிழர் அதிகமாக வாழும் பல்வேறு பகுதிகளில் பவித்திரன் எனும் குறித்த சிறுவனைத் தேடினர்.இறுதியில், முகப்பேரில் ஜெயலட்சுமி என்பவர் இருப்பதைக் கண்டு பிடித்தனர். அவர் பொலிசாரிடம் ஒரு முகவரி கொடுத்து விட்டு மற்றொரு முகவரியில் வசித்து வந்துள்ளார்.இந்தநிலையில் பவித்திரன் தனது மகன் என்று கூறி அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் சேர்த்துள்ளார். தற்போது, அவன் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து பொலிஸார் பவித்திரனை மீட்டு சிவபாலனிடம் ஒப்படைத்தனர். 45 நாள் தேடுதலுக்கு பிறகு மகனை மீட்டுக் கொடுத்த பொலிசாருக்கு சிவபாலன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

அண்ணாவை தேடிய சிறுமியின் கதை!

Girle4_CIகாணாமல் போனவர்களின் உறவினர்களது தொடர் போராட்டங்களில், அனைத்துலகத்தின் கவனத்தினைப் பெற்றிருந்த 13வயது சிறுமியொருவர் கடத்தப்பட்ட சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதுதொடர்பில் அனைத்துலகத்தின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அச்சிறுமியின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் அனைத்துலக சமூகத்தினைக் கோரியுள்ளது. கிளிநொச்சி தருமபுரத்தினைச் சேர்ந்த விபூசிகா எனும் 13வயதுடைய சிறுமியே இன்று சிறிலங்கா படையினரால் அவரது வீட்டில் வைத்து கடத்தப்பட்டிருந்தார்.காணாமல்போன தனது அண்ணனுக்காக தனது தாயாருடன் தொடர் போராட்டங்களில் பங்கெடுத்திருந்ததோடு, ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளா நவிப்பிள்ளை மற்றும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமறூன் ஆகியோரது யாழ்ப்பாண பயணத்தின் போது, காணாமல்போனவர்களது உறவினர்களின் போராட்டத்தில் கதறியழுது, அனைத்துலக ஊடகங்களின் கவனத்தினைப் பெற்றிருந்தவர்.இந்நிலையில் கிரிமினல் குற்றவாளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி சிறிலங்கா அரச படையினர் அச்சிறுமியின் வீட்டினைச்சுற்றி வளைத்திருந்தனர்.அச்சிறுமியும் அவரது தாயாரும் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்த மறுகணம், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளார் அலுவலகத்தின் உடனடி கவனத்திற்கு கொண்டு சென்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நாசபைக்கான பிரதிநிதி முருகையா சுகிந்தன் அவர்கள், காணாமல் போனவர்களது உறவினர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தமாறும் கோரியிருந்தார்.இதேவேளை சிறிலங்கா அரசினது அத்துமீறல்கள் அனைத்துலக ஊடகங்களில் அம்பலப்பட்டு வரும் நிலையில், குறித்த சம்பவத்தினை அனைத்துலக ஊடகப்பரப்பிற்கும் நா.தமிழீழ அரசாங்கம் கொண்டு சென்றது.பிந்திய செய்திகளின்படி அச்சிறுமி மட்டுமே சிறிலங்காப் படையினரால் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.குறித்த சம்பவத்தில் காவல்துறை ஒருவர் காயப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண, சிறிலங்கா இராணுவத்துக்கு இதில் தொடர்பு கிடையாது என சிறுமியின் கடத்தலைமூடிமறைத்துள்ளார்.

பிரித்தானியப் பிரதமரின் யாழ் பயணத்தின் போது :http://youtu.be/VD_b8hcnHHA

நவிப்பிள்ளையின் பயணத்தின் போது :http://youtu.be/kJqCMujXP2I

சிறுமியின் கதை :என் அண்ணாவ தாங்கோ .., ” ” என் அண்ணாவ எங்கே மறைச்சு வைச்சிருக்கிறீங்க… “என காணாமல்போனவர்களின் உறவுகளால் நடாத்தப்படும் போராட்டங்களில் ஒரு சிறுமி கதறி அழுவாள் .அந்த சிறுமி மூன்று அண்ணன்களுக்கு நான்காவதாக பிறந்தவள். முதல் இரண்டு அண்ணாகளையும் பறிகொடுத்து விட்டாள் மூன்றாவது அண்ணனை தொலைத்து விட்டு தன் தாயுடன் சேர்ந்து தேடிக்கொண்டு இருக்கின்றாள்.இவள் காணாமல் போனவர்களின் உறவுகளால் நாடத்தப்படுகின்ற அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு தன் அண்ணாவை மீட்பதற்காக கதறி அழுவாள்.புளியம்பொக்கணை முசுறன்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் இந்த சிறுமி தர்மபுரம் மகா வித்தியாலையத்தில் தரம் 8 லில் கல்வி கற்று வருகிறாள்.திருகோணமலை செல்வநாயகபுரத்தில் மூன்று அண்ணன்களுக்கு நான்கவதாக பிறந்தவளே விபூசிகா என்னும் அந்த சிறுமி.இவள் சிறு வயதாக இருந்த போதே தகப்பனார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார் .அதன் பின்னர் இவளது தாயார் கூலி வேலை செய்தும் வீட்டில் இருந்து கடைகளுக்கு சாப்பாடு செய்து கொடுத்தும் அதன் மூலம் வரும் வருமானத்திலையே இவர்களை வளர்த்து வந்தார்.இந் நிலையில் சிறுமியின் மூத்த அண்ணன் படித்து கொண்டிருந்த காலப்பகுதியில் 2006ம் ஆண்டு 10 மாதம் 20 ம் திகதி வீட்டுக்கு அருகாமையில் வைத்து இனம் தெரியாத நபர்களால் சுட்டு படுகொலை செய்ப்பட்டார்.அதன் பின்னர் திருகோணமலையில் இருப்பது பாதுகாப்பு இல்லை என கருதி அந்த சிறுமியின் தாய் தன் ஏனைய மூன்று பிள்ளைகளுடனும் வன்னிப்பகுதிக்கு வந்து குடியேறினாள்.பின்னர் யுத்தம் காரணமாக ஒவ்வொரு ஊராக இடம்பெயர்ந்து சென்று 2009ம் ஆண்டு 5ம் மாதம் 5ம் திகதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்த போது அங்கு வீசப்பட்ட எறிகணைக்கு தனது இரண்டாவது அண்ணனையும் பறிகொடுத்தாள்.அதன் பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்ற வேளை 2009ம் ஆண்டு 5ம் மாதம் 15ம் திகதி தன் மூன்றாவது அண்ணனையும் தொலைத்து விட்டாள் .அதன் பின்னர் தனது தாயுடன் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்துவிட்டாள் . தன் மூன்றாவது அண்ணனனையும் பறிகொடுத்து விட்டதாக நினைதிருந்த வேளையில் தான் L.L.R.C புத்தகத்தில் தன் அண்ணனின் படம் இருப்பதாக அறிந்து கொண்டாள்.அவள் அந்த புத்தகத்தை பார்த்த போது புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் போராளிகள் என சில இளைஞர்கள் உடல் பயிற்சி செய்யும் படம் இருந்தது. அந்த இளைஞர்களுக்குள் தனது மூன்றாவது அண்ணனும் இருப்பதை கண்டாள்.அதன் பின்னரே தன் அண்ணன் உயிருடன் இருக்கிறான் என்ற சந்தோசத்தில் அவனை தேடி அலைந்து கொண்டும் அண்ணனை மீட்பதற்காகவும் கதறி அழுது கொண்டு இருக்கிறாள்.கணவனையும் இழந்து மூத்த இரண்டு ஆண் பிள்ளைகளையும் இழந்து மூன்றாவது ஆண் மகனையும் தொலைத்து விட்டு நான்காவது பெண் பிள்ளையுடன் சேர்ந்து தொலைந்து போன தன் மூன்றாவது மகனை பற்றிய தகவல் அறிய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு கதறி அழுது கொண்டு இருக்கிறாள் அந்த சிறுமியின் தாய்.தொலைந்த தன் மூன்றாவது மகனை பற்றிய தவல்களை அறிய அந்த தாய் செல்லாத இடம் இல்லை எங்கும் அவனை பற்றிய தகவல்களை அந்த தாயால் அறிய முடியவில்லை.தன் மகன் இன்றும் உயிருடன் ஏதோ ஓர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளான் என்றே அந்த தாய் நம்புகிறாள்.தன் மகனை உடனே விடுதலை செய்யாவிட்டாலும் அவனை பற்றிய தகவல்களையாவது தெரிவியுங்கள் என்று கோரியே அனைத்து போராட்டங்களிலும் அந்த தாய் கலந்து கொண்டு கதறி அழுகிறாள்.அதேவேளை அந்த தாய் தனது நான்காவது பிள்ளையான அந்த சிறுமியின் எதிர்காலம் பற்றியும் கவலையுடன் இருக்கிறாள்.குறித்த சிறுமி பற்றி தாய் கூறுகையில்:இவள் அண்ணா வேணும் என்று அழுது கொண்டு இருக்கிறாள். படிப்பில் கவனம் செலுத்துகிறாள் இல்லை. வீட்டிலும் வெறித்து பார்த்து கொண்டு இருப்பாள். திடீர் திடீர் என அண்ணா வேணும் என அழுவாள்.ஏம்மா அண்ணாவை விடுனம் இல்லை ? அண்ணாவை எங்கே தடுத்து வைச்சிருபாங்கள் ? அண்ணாவை இன்னுமா சித்திரவதைப்படுத்துவாங்க ? எப்ப அம்மா அண்ணாவை விட்டுவாங்க ? என்றெல்லாம் கேட்டு அழுவாள் எனக்கு என்ன சொல்லுரதேன்றே தெரியாமல் இருக்கும்.பள்ளிக்கூடம் போகாமல் என்னோடு போராட்டங்களில் கலந்து கொண்டு அண்ணா வேணும் என்று அழுகிறாள். பள்ளிக்கூடம் போய் படி என்றா அண்ணா முதல்ல வரட்டும் அப்புறம் படிக்கலாம் என்கிறாள்.இப்ப இவளை நினைச்சு இவள் எதிர்காலத்தை நினைத்து எனக்கு கவலையாக இருக்கிறது.என அன்று ஒருநாள் அவள் தாயார் கூறினார்.அந்த சிறுமியோ என் அண்ணா எங்கே ? என் அண்ணாவ எங்கே வைச்சிருக்கிறீங்க ? ஏன் என் அண்ணாவை என்கிட்ட இருந்து பிரிச்சு ஏன் என்னை அநாதை ஆக்கினீங்க ? எனக்கு என் அண்ணா வேணும் என கதறி அழுது கொண்டே இருந்தவள் இன்று அவளும் கடத்தப்பட்டு விட்டாளாம்.

தாடி முளைத்த பெண்!

Evening-Tamil-News-Paper_47533380986இங்கிலாந்தில் உள்ள பெர்க்ஷயர் என்ற இடத்தில் வசித்து வரும் சீக்கிய தம்பதியின் மகள் ஹர்னாம் கவுர் (23). இவர் மற்ற பெண்களில் இருந்து மாறுபட்ட தோற்றம் கொண்டவராக காட்சியளிக்கிறார். ஹர்னாம் கவுர் சிறுவயது முதலே ஆண்களைப் போலவே முகத்தில் தாடி, மீசை, மார்பு பகுதியில் முடி என வளரத் தொடங்கியது. பெற்றோர் ஹர்னாம் கவுரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஹர்னாம் கவுருக்கு கருப்பையில் கட்டி காணப்பட்டது. இதனால் அவருக்கு ஹார்மோனில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உடலில் ஆண்களை போல முடி முளைத்துள்ளது என்று தெரிவித்தனர்.அக்கம் பக்கத்தினர் கேலி பேச்சும், சக தோழிகளின் கிண்டல் பேச்சாலும் ஆரம்பத்தில் மனம் நொந்து வாரத்திற்கு இரண்டு முறை ஷேவிங் செய்து வந்தார். பின்னர் அவரது பெற்றோர் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அதன் ஐதீகத்தின் படி உடலில் வளரும் முடியை வெட்டக் கூடாது என்ற நம்பிக்கை காரணமாக ஷேவிங் செய்வதை நிறுத்திக் கொண்டார். தற்போது இளவயது பெண்ணாக மாறிவிட்ட ஹர்னாம் கவுர் கூறுகையில்,எனக்கு தாடி, மீசை வளர்ந்தாலும் நான் இப்போதும் நான் என்னை கூடுதல் பெண்மை தன்மையுடன் தான் உணர்கிறேன். எனக்கு தாடி மீசை இருப்பதை பற்றி வருத்தம் எதுவும் இல்லை. எங்களது சம்பிரதாயத்தின்படி அதனை நான் விரும்பு கிறேன். கடவுள் என்னை இப்படி படைத்ததற்காக நான் மகிழ்ச்சியே அடைகிறேன். ஏன் சில மர்ம நபர்கள் கொலை மிரட்டல் கூட விடுத்துள்ளனர். தற்போது எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை என்கிறார் உறுதியான மனதுடன்.

பெண் பிரதமருடன் நெருங்கிய ஒபாமா!

தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற மறைந்த நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலி பிரார்த்தனை பல நாட்டு அரச தலைவர்கள் 

obama_photo_001

கலந்து கொண்டார்கள்.இந்நிகழ்வின் போது, டென்மார்க் பிரதமர் ஹெலி துரோனிங் ஸ்மித், பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரெனுடனும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடனும் கைபேசியில் படம் எடுத்துக்கொண்டனர்,இத்தகைய நடவடிக்கையை பிரித்தானிய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.ஒரு நினைவஞ்சலி கூட்டத்தில் சோகமான சூழ்நிலையில், மூவரும் ஒட்டிக்கொண்டு கைபேசியிலேயே படம் பிடித்துக்கொண்டது பொருத்தமற்ற ஒரு செயல் என்று சில பத்திரிகைகள் விமர்சித்திருந்தன.மற்றொரு பத்திரிகை கூறுகையில், ஒபாமாவின் மனைவி இதனை வெறுப்புடன் பார்த்ததாக தெரிவித்துள்ளது.

ஐந்து குழந்தைகளை வயிற்றில் சுமக்கும் 23 வயது பெண்!

ஒரு குழந்தையை வயிற்றில் சுமப்பது என்பதே பெரிய கரியம். இதில் 23 வயது பெண் ஒருவர் ஐந்து குழந்தைகளை வயிற்றில் சுமக்கிறார்.czech-motherexpecting-country-first-quintuplets-_t4n1-300x287செக் குடியரசை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு ஐந்து குழந்தைகளை சுமக்கிறார். ஆரம்பத்தில் வயிறு வழமைக்கு மாறாக இருப்பதை கண்டு, இரட்டை குழந்தைகள் என்று எண்ணியிருக்கிறார்.பின்னர் மருத்துவமனையில் ஸ்கான் செய்து பார்த்தபோதுதான் ஐந்து குழந்தைகள் வயிற்றில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ஐந்து குழந்தைகளுக்கும் எப்படி பாலூட்டுவது என்பதே தனது தற்போதைய சிந்தனையாக இருக்கிறது என அப்பெண் குறிப்பிடுகிறார்.