மாணவியிடம் சில்மிஷம்!

பழனி அருகே மாணவியிடம் சில்மிஷம்: ஆசிரியரை அடித்து உதைத்த கிராம மக்கள்திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பதினாறு புதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஆசிரியராக ஓபுளாபுரத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 33) பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி மாணவிகளிடம் செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி வந்து உள்ளார்.

நேற்று முன்தினம் 5-ம் வகுப்பு மாணவி ரஞ்சிதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது.) என்பவரிடம் ஆசிரியர் ஜெயச்சந்திரன் ஆபாச படங்களை காட்டி சில்மிஷம் செய்தார். பதறி போன மாணவி ரஞ்சிதா அழுது கொண்டு தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அந்த பகுதி மக்களுடன் சென்று பள்ளிக்கு திரண்டு வந்தனர். பள்ளியில் இருந்த ஆசிரியர் ஜெயச்சந்திரனை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். வேதனை தாங்காமல் ஆசிரியர் அலறினார். இந்த தகவல் காட்டு தீ போல பரவியது.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆசிரியரை மீட்டனர். ஆனாலும் பொது மக்களின் ஆத்திரம் தீரவில்லை. ஆசிரியரை செருப்பால் அடித்தனர். இதனால் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே டி.எஸ்.பி. குப்புராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ஆசிரியர் ஜெயசந்திரனை கைது செய்தனர்.

இதுகுறித்து தொடக்க கல்வி அலுவலர் ஆனந்தம் கூறுகையில் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பின்னர் பொது மக்கள் கலைந்து சென்றனர். ஆனாலும் ஆசிரியரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக