மணிவண்ணனின் மகன் ஈழப் பெண்னை திருமணம் செய்தார்.

மறைந்த இயக்குநர் மணிவண்ணன் மகன் ரகுவண்ணனுக்கும் ஈழப் பெண் அபிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. நடிகர் சத்யராஜ் முன் நின்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். திரையுலகைச் சேர்ந்த விவேக், ஆர்.கே.செல்வமணி போன்றவர்கள் நேரில்

manivannan-son-marriage-seithy-20130923-375

வந்து மணமக்களை வாழ்த்தினர். மணிவண்ணன் உயிரோடு இருந்த போதே, கடந்த மார்ச் முதல் வாரத்தில் ரகுவண்ணன் – அபி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அமைதிப் படை 2 வெளியான பிறகு ஜூன் மாதத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த ஜூன் மாதத்தில்தான் மணிவண்ணன் அகால மரணமடைந்தார். அவர் மரணமடைந்த சில வாரங்களில் மணிவண்ணன் மனைவி செங்கமலமும் மரணமடைந்தார்.இதனால் ரகுவண்ணன் திருமணமும் தள்ளிப் போனது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரகுவண்ணன் – அபி திருமணம் சென்னையில் நடந்தது. நடிகர் சத்யராஜ் முன்நின்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். நடிகர் விவேக், ஆர்கே செல்வமணி உள்ளிட்டோர் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தினர்.

பின்னூட்டமொன்றை இடுக