பெண் மருத்துவர் கொலையுடன் சம்பந்தப்பட்ட நால்வரும் சுட்டுக்கொலை!

கைது செய்தனர் ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான 4 பேரும் போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.ஹைதராபாத்தை சேர்ந்த 26 வயது நிரம்பிய கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.அந்த இடத்திலேயே அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து, அதன் பின் அந்த பெண்ணின் கொலை செய்து உள்ளனர். அதோடு பின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இருக்கும் பாலத்தின் கீழ் வைத்து எரித்து இருக்கிறார்கள்.இந்த கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் போலீசார் அதன்பின் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். கொலையாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.அந்த பெண்ணை மிகவும் மோசமாக கொடுமைப்படுத்தி கொலை செய்துள்ளனர். அவரின் வாயில் மதுவை ஊற்றி கொடுத்துவிட்டு, பின் தலையில் கல்லால் அடித்துள்ளனர். கடைசியாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து 27 கிமீ அவரின் உடலை லாரியில் வைத்து கொண்டு சென்று பின் எரித்துள்ளனர்.இந்த இலையில் கைது செய்யப்பட 4 பேரையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இவர்களை நடு ரோட்டில் ஓட விட்டு கொல்ல வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான 4 பேரும் போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.குற்றம் நடந்த இடத்திற்கு 4 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு அழைத்துச் சென்றபோது 4 பேரும் தப்பிசெல்ல முயற்சி செய்துள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி அவர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் அறிவித்துள்ளது .

ஏலியன்கள் பேசும் மொழி தமிழ்!

ஏலியன்கள் பேசுவதும் தமிழ்: பிளையடீஸ் எனப்படும் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏலியன் (வேற்றுகிரக வாசிகள்) வாழ்கின்றனர். அவர்கள் பூமியில் நிலவும் பல்வேறு பிரச்னைகளையும் தீர்வு கண்டு வருவதாக கூறப்படுகின்றது. அந்த ஏலியன்கள் பேசும் மொழியே தமிழாக இருக்கின்றது என்று ஆராய்ச்சியாளர்களும் கூறி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் அலெக்ஸ் காலியரும் ஏலியன்கள் பேச்சு மொழி தமிழ் தான் என்றும் கூறியுள்ளார். தமிழ் மொழியானது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி என்று நம் முன்னோர்களும், தமிழ் அறிஞர் பெரு மக்களும் கூறி வருகின்றனர். தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 400-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துகளில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது. தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துகள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியிலிருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் “வட்டெழுத்து” முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது. தமிழை முதன் முதலில் தோற்றுவித்தது கடவுள் சிவ பெருமான் ஆவாரார். சிவபெருமானிடம் இருந்து பிரிந்த விந்தணுக்கள் ஆறு கணுக்களாக விழுந்தன. அவைகளில் இருந்து ஆறு குழந்தைகள் தோன்றின. அந்த குழந்தைகளை 6 கார்த்திகை பெண்கள் வளர்த்தன. பிறகு, முருகன் என்று உருவெடுத்தால், அவர் தமிழக்கு உரிதான கடவுளாக பார்க்கப்படுகின்றார். அந்த 6 கார்த்திகை பெண்கள் இருந்த இடமே பிளையடீஸ் என்பபடுகின்றது.ஏலியன்கள் உலகில் தமிழை தவிர்த்து பல்வேறு மொழிகள் தோன்றக் காரணமாக இருந்துள்ளனர். இவர்கள் உலகில் நிகழும் மாற்றங்களுக்கும், அறிவியல் வளர்ச்சிகளுக்கும் தொழில் நுட்பத்திற்கும் காரணமாகவும் இருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது. இவர்களை வேற்றுகிரக வாசிகள் (ஏலியன்) என்றும் கூறுகின்றனர். இவர்கள் தான் உலகிற்கு பல்வேறு இடங்களுக்கு மற்ற மொழிகளையும், அறிவியல் ஆராய்ச்சிகளையும் பரப்பியுள்ளனர். பிளேடியன்கள் தான் மொழி வரலாறு, விஞ்ஞானம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகின்றது. ஏலியன்கள் பல்வேறு நாட்டு மக்களுடன் தொடர்பில் இருப்பதாக அமெரிக்காவில் இது குறித்து ஆராய்ச்சி செய்யும் குழுவினர் கூறி வருகின்றனர். உலகத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வுகளும் பிளேடியன்கள் தான் கூறிவருவதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் பிளேடியன்களுடன் தொடர்பில் உள்ள குழுவினர் உலகத்தில் நிகழும் பருவகால மாற்றம், பல்வேறு சிக்கல்களுக்கும் தீர்வும் கண்டுள்ளனர். இவர்கள் புத்தகங்கள் படிப்புது இல்லை. பிரச்னைகளுக்கு பிளேடியன்கள் தொடர்பு கொண்டு தீர்வும் கண்டு வருவதாக கூறப்படுகின்றது. நீண்ட காலமாக ஏலியன்களுன் தொடர்பில் உள்ள அமெரிக்காவை சேர்ந்த பேராசியர் அலெக்ஸ் காலியர் 1995ம் ஆண்டு தனது குழுவினர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, பிளேடியன்களால் தான் மற்ற மொழிகள் உலகிற்கு பரப்பட்டது. அவர்களே உலகின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்றனர். உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழ் தான் என்று கூறினார். தமிழ் தான் பேச்சப்பட்டது. உலகின் மூத்த மொழியே தமிழ் தான் என தனது குழுவினர்களுக்கு கூறினார். தமிழர்கள் ஏலியன் (பிளேடியன்) தொடர்பிலும் இருந்துள்ளனர். என்றும் அலெக்ஸ் காலியர் தெரிவித்துள்ளார். அந்த ஏலியன்கள் முழுவதும் பேசும் மொழியாக தமிழ் தான் இருக்கின்றது. கார்த்திகை நட்சத்திரத்தில் வாழும் ஏலியன்கள் அவர்கள் தமிழ் மொழில் பேசுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிசயம்.. மனித ரூபத்தில் ஆட்டுக்குட்டி!

Lamb in human form near Trichyஅதிசயம் ஆனால் உண்மை… மனித ரூபத்தில் ஒரு ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. வேறு ஏதோ ஒரு நாட்டில் இல்லை. நம்ம திருச்சிக்கு பக்கத்துலதான். துறையூரை அடுத்த நல்லவண்ணிபட்டி என்ற கிராமம் உள்ளது. நேற்று அதிகாலை ஆடு ஒன்று குட்டியை ஈன்றெடுத்தது. ஆனால் அந்த குட்டி ஆடுபோல இல்லை. அது மனித வடிவத்தில் பிறந்துள்ளது. இப்படி ஒரு அதிசய ஆட்டுக்குட்டி பிறந்திருப்பதை பார்க்க சுற்றுவட்டார ஊர்ஜனங்களே ஒன்று திரண்டு ஓடிவந்தனர். செல்போனில் ஆர்வத்துடன் படம் எடுத்துக் கொண்டனர். அனைவர் முகத்திலும் பயமும் அதிர்ச்சியும் மாறி மாறி வந்ததே தவிர ஒருவரும் மகிழ்ச்சியடையவில்லை. சில பேர் அந்த ஆட்டுக்குட்டியை பரிதாபமாக பார்த்தனர். சில பேர் பார்த்த அடுத்த வினாடியே, பார்க்காமல் தவிர்த்து ஓடி வந்துவிட்டனர். கடைசியில் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அந்த அதிசய ஆட்டுக்குட்டி இறந்தேபோய்விட்டது.

10 மணி நேரம் பணிபுரியும் 102 வயது மருத்துவர்!

இந்தியாவிலேயே அதிக வயதுடைய மருத்துவர் புனே நாட்டில் வாழ்ந்து வருகிறார்.

புனேவில் வசித்து வரும் பல்வந்த் கத்பாண்டே என்பவருக்கு வயது 102 ஆகிவிட்டது. ஆனாலும், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார். அதேபோல் வாரத்தின் 7 நாட்களும் ஓய்வே எடுக்காமல் அவர் சிகிச்சை அளிக்கிறார். அந்த பகுதியில் கைராசி மருத்துவராக விளங்கும் இவர் சிகிச்சையளிக்க மக்களிடம் அதிகபட்சம் மட்டுமே வசூலிக்கிறார். அப்படி  சம்பாதிக்கும் பணத்தையும் ஏழை, எளியவர்களுக்கு கொடுத்து விடுகிறார்.

கடந்த மார்ச் 15ம் தேதி அதிக வயதுடைய மருத்துவர் என்ற சாதனையை அவர் பெற்றார். அன்றுதான் அவருக்கு 102 வயது தொடங்கியது.
ஓய்வு பெற எனக்கு விருப்பமில்லை. என்னுடைய இறப்பு வரை நான் சிகிச்சை அளித்துக்கொண்டே இருக்க வேண்டும். சிகிச்சை அளித்துக் கொண்டு இருக்கும் போதே நான் மரணம் அடைய வேண்டும் என்பதுதான் என் ஆசை.  எனக்கு செல்வம், புகழ் எல்லாவற்றையும் இந்த மருத்துவ தொழில்தான் கொடுத்தது என அவர் கூறியுள்ளார்.
அவரின் மகன் மற்றும் பேரன்கள் என அனைவருமே மருத்துவராகவே இருக்கிறார்கள். புனேவில் பல வருடங்களாக இவரிடமே பலரும் சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர்.

காதலை முறிப்பதற்கு கடை!

இந்தியா காதலர்கள்உங்கள் காதலன் அல்லது காதலியை விட்டு விலகுவதற்கு இன்னொருவருக்கு நீங்கள் பணம் கொடுப்பீர்களா?
இந்த 28 வயது இளைஞர் அதைத்தான் செய்திருக்கிறார்.
“உறவை முறித்துக் கொள்வது என்பது யாருக்குமே மிகவும் கடினமான விஷயம். அந்த வேதனையை நான் நேரடியாக அனுபவிப்பதற்கு பதிலாக இன்னொருவர் அனுபவிப்பது எளிமையாக இருக்கும் என்று நினைத்தேன்,” என்கிறார், ட்ரெவர் மெயர்ஸ் என்ற அந்த இளைஞர்.

அது எப்படி?

உறவுகளை முறிப்பதற்கென்றே ஒரு நிறுவனம் இருக்கிறது. ஆங்கிலத்தில், `The Breakup Shop’ என்று சொல்கிறார்கள். நம்ப முடியவில்லையா? நிஜம்தான். அந்த நிறுவனத்தின் சேவையைத்தான் ட்ரெவர் நாடினார். அவர் இருப்பது கனடாவில்.
“எனக்கு ஒத்துவராது என்று தெரிந்ததும் ஒருசில குறுகிய கால நட்புக்களை பிரேக்அப் ஷாப் உதவியுடன்தான் கைகழுவிவிட்டேன். எப்படியிருந்தாலும் நமக்காக உறவை முறிப்பவர்கள் பணம் பெற்றுக் கொள்கிறார்கள். இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை. இதை அடிக்கடி பயன்படுத்தாவிட்டாலும். அதற்காக ஒரு நிறுவனம் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் அவர்.

எப்படி உருவானது `உறவை முறிக்கும் கடை’?

கனடாவைச் சேர்ந்த சகோதரர்கள் இவான் மற்றும் மெகென்ஸி கீஸ்ட் ஆகியோர் இணைந்து, 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதை உருவாக்கினார்கள்.
ஆனால், அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா?
காதலர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
மெகென்ஸியை காதலித்து வந்த ஒரு பெண், திடீரென அவரது வாழ்க்கையில் இருந்து மறைந்துவிட்டார். தினமும் சுற்றித்திரிந்து, உற்சாகமாக இருந்த அவரது மனம் துடித்தது. ஆனால், தொலைபேசித் தொடர்பு கூட இல்லை. அனுப்பிய குறுந்தகவல்களுக்கும் காதலியிடமிருந்து பதில் இல்லை. பிரிவை நேரடியாகச் சொல்லும் மன வலிமை அந்தக் காதலிக்கு இல்லை” என்றார் இவான்.
அந்தப் பிரிவால் பிறந்ததுதான் `பிரேக்அப் ஷாப்’. அடுத்த ஒரே வாரத்தில் அந்த நிறுவனம் உருவானது.காதலியோ, காதலனோ அல்லது நாம் நட்பு வைத்திருக்கும் எந்த ஒரு நபருடனோ உறவு முறிய வேண்டுமானால் அவருக்கு மொபைல் ஃபோனில் குறுந்தகவல் அல்லது ஈ-மெயில் மூலம் தகவல் அனுப்ப குறைந்தபட்ச 10 கனடா டாலர்களை (6 பிரிட்டன் பவுண்டுகள்) கட்டணமாக வசூலிக்கிறது பிரேக்அப் ஷாப். அதிகபட்சமாக, குக்கீஸ் மற்றும் ஒயின் பாட்டில் ஆகிய பரிசுப்பொருட்களுடன் பிரேக்அப் பரிசுப் பெட்டி ஒன்றை அனுப்புவதற்கான கட்டணம் 80 டாலர்கள்.தகவல்களை எப்படி வேண்டுமானாலும் வடிவமைத்துக் கொள்ளலாம். ஆனால், தரக்குறைவாகவோ மனம் புண்படும் வகையிலோ எந்தத் தகவலையும் தங்கள் நிறுவனம் அனுப்பாது என்கிறார் இவான்.கடந்த ஒன்றரை ஆண்டுகளில், நூற்றுக்கணக்கான உறவுகளை முறித்து சிறந்த சேவையாற்றியிருப்பதாக பெருமிதம் கொள்கிறார்கள் இந்த சகோதரர்கள். இது பகுதி நேர வேலைதான். தொழில்நுட்பம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் முழுநேர பணியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
தங்கள் நிறுவனத்தின் நோக்கம் பற்றிக் கேள்விப்பட்டதும், `என்ன கொடுமை சார் இது’ என்று சொல்லி சிலர் சங்கடப்படுகிறார்களாம். ஆனால், காலம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இவானின் பதிலாக இருக்கிறது.
“மிக வேகமான தகவல் தொடர்பு உலகில் இருக்கிறோம். எல்லாமே உடனுக்குடன் நடக்கிறது. அப்படியே முடிந்தும் போகிறது. எல்லா வழிகளிலும், அடுத்த தலைமுறை தகவல் தொடர்பில் புரட்சி படைக்கிறது” என்கிறார் இவான்.ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் இணையதள இன்ஸ்டியூட்டின் ஆராய்ச்சி விஞ்ஞானியான பெர்னி ஹோகன், உறவுகளை முறித்துக் கொள்வது என்பது ஒரு புதிய பரிமாணத்தை அடைந்துவிட்டதாகச் சொல்கிறார்.
“காதலன் – காதலி இடையே இப்போதெல்லாம் ஒருமித்த கருத்து என்ற தத்துவம் எல்லாம் மாறிப்போய்விட்டது. இணையதளம் வழியாகவோ அல்லது வேறு வழிகளிலோ ஒருவரைச் சந்திக்கும்போது, அவர்கள் நண்பர்களின் நண்பர்களாகவோ அல்லது சக பணியாளர்களின் நண்பர்களாகவோ இருப்பதில்லை. அதனால், உறவு முறியும்போது பெரும்பாலும் நெருங்கிய நட்புக்களைப் பிரியும்போது ஏற்படும் வலி இருப்பதில்லை” என்கிறார் அவர்.”அதிகாரப்பூர்வமாக உறவை முறித்துக் கொள்ளாமல், மூன்றாவது நபர் மூலமாகமாக உறவை முறித்துக் கொள்வது ஒருவேளை சரியானதாக இருக்கலாம். இருந்தாலும், இது நெறிமுறை மீறல்தான்” என்கிறார் அவர்.
அதே நேரத்தில், `உன் காதல் உனக்கு இல்லை’ என்று யாரோ ஒருவர் தீர்ப்பு சொல்வதை, எல்லாக் காதலர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதும் உளவியலாளர்களின் கருத்தாக உள்ளது.

காதில் சிக்கிய மலைப்பாம்பு!

அமெரிக்க ஒரிகான் மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் காதில் கம்மல் மாட்டும் பகுதியில் சிக்கிக்கொண்ட தன் செல்லப்பிராணி மலைப்பாம்பை பத்திரமாக மீட்டுள்ளார்.இந்த சம்பவத்தை அடுத்து, மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் , அங்கிருந்து, தன்னுடைய புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிந்துள்ளார். அதில், இதுதான் தன்னுடைய வாழ்க்கையின் மிக விநோதமான தருணங்களில் ஒன்று என்றும், தன்னுடைய மலைப்பாம்பு கம்மல் மாட்டும் பகுதியில் சிக்கிக் கொண்டதால் அவசர அறைக்கு சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பார்ட் என்ற பெயர் கொண்ட ஒரு மலைப்பாம்பை தான் கையில் வைத்திருந்ததையும், அது காதில் உள்ள ஓட்டை ஒன்றின் வழியாக அது சென்றதை கூறவும் ஃபேஸ்புக்கில் ஆஷ்லே கிளாவில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.மருத்துவமனையிலும், தன்னுடைய மலைப்பாம்பை நினைத்து கவலைப்பட்டாராம் ஆஷ்லி . ஆனால் எல்லாமே நல்லபடியாக முடிந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் தன்னுடைய காதை அறுக்காமல், காதை மரத்துப் போக வைத்ததாகவும், காதுத்துவாரத்தை விரிய வைத்து, அதில் சற்று சோப்பு போன்றவற்றை செலுத்தி மலைப்பாம்பை எடுத்ததாகவும் இணையத்திலிருந்த தன்னுடைய நண்பர்களிடம் கூறினார் ஆஷ்லே.
பார்ட் மலைப்பாம்பு நலமாக இருக்கிறதாம்.

உலகம் அழிய இன்னும் இரண்டரை நிமிடங்களே!

உலகில் பாதுகாப்பு சூழல் இருளடைந்து வருவது மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு வரும் கருத்துக்கள் ஆகியவற்றின் பின்னணியில், உலகம் அழிந்து முடியும் நாள் கடந்த ஆண்டு இன்னும் நெருங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.உலகம் பேரழிவால் முடியும் நாள் பற்றி பைபிளில் படித்திருக்கிறோம்.ஆனால், நவீன உலகில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் , அணு ஆயுதப் போர் நடக்கும் சாத்தியக்கூறு போன்றவற்றால் உலகம் அழியக்கூடிய வாய்ப்புகளைக் கணக்கிட்டு, உலகிற்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம், விஞ்ஞானிகள் ஒரு ‘உலகம் அழியும் நாள்’ காட்டும் கடிகாரம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள்.அந்த கடிகாரத்தின் முட்கள் நள்ளிரவுக்கு நகர்ந்தால் உலகம் அழியும் என்று அர்த்தம்.ஒவ்வொரு ஆண்டும் உலக பாதுகாப்பு சூழலின் தீவிரத்தன்மையை கணக்கிட்டு, இந்த கடிகாரத்தின் முட்களை விஞ்ஞானிகள் நகர்த்துகிறார்கள்.இந்த ஆண்டு , அணு விஞ்ஞானிகள் சஞ்சிகை என்ற இதழ், இந்த கடிகாரத்தின் நிமிடம் காட்டும் முள்ளை, நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் இருப்பதாக காட்டிய நிலையில் இருந்து இரண்டரை நிமிடங்களே இருப்பதாக நகர்த்தியிருக்கிறார்கள்.அதாவது உலகம் அழிய இன்னும் இரண்டரை நிமிடங்களே இருக்கிறது என்று சொல்லுமளவுக்கு, உலகின் தற்போதைய பாதுகாப்பு சூழல் இருக்கிறதாம்!இந்தக் கடிகாரத்தின் முட்கள் ‘உலகம் அழியும் நள்ளிரவு’ நேரத்தை இந்த அளவுக்கு நெருங்குமாறு காட்டப்படுவது இரண்டாவது முறையாகும்.”போருக்கு இட்டுசெல்லக்கூடிய முறுகல் நிலையை தாங்களே எண்ணெய் ஊற்றி வளர்க்காமல், அமைதி” காக்கும்படி உலக தலைவர்களை அணு விஞ்ஞானிகள் இதழின் தலைவர் ரேச்சல் புரோன்சன் வலியுறுத்தியுள்ளார்.பருவகால மாற்றம் பற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூற்றுகள், அமெரிக்காவின் அணு ஆயுத விரிவாக்கம், உளவு துறை நிறுவனங்களை கேள்விக்குள்ளாக்குதல் ஆகியவை உலகம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களின் சாத்தியக்கூறை உயர்த்தியிருப்பதாக அணு விஞ்ஞானிகளின் இதழ், அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஹைட்ரஜன் குண்டு பரிசோதகைளுக்கு பிறகு, 1953 ஆம் ஆண்டு உலக முடிவு நாளின் நள்ளிரவுக்கு இரண்டு நிமிடத்திற்கு முன்னால் இந்த அடையாள கடிகாரத்தின் நிமிட முள் குறிக்கப்பட்ட பிறகு, இந்த நிமிட முள் குறிப்பு மிகவும் நெருங்கி வந்திருப்பது இப்போது தான்.

உலக முடிவு நாள் கடிகாரம் என்பது என்ன?உலக முடிவு நாள் கடிகாரத்தின் ஒரு நிமிடம் என்ற குறிப்பு உலகம் எவ்வளவுக்கு அதிகமாக பாதிக்கப்படலாம் என்பதை காட்டுகின்ற உருவகமாகும்.இந்த அடையாள கருவி அணு விஞ்ஞானிகளின் இதழால் 1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

வரைபடம்அணு விஞ்ஞானிகளின் இதழ் 1945 ஆம் ஆண்டு சிக்காகோ பல்கலைக்கழகத்தில் முதலாவது அணு ஆயுதங்களை உருவாக்க உதவிய விஞ்ஞானிகள் குழுவால் நிறுவப்பட்டதாகும்.இன்று இந்த குழுவில், உலக அளவிலுள்ள இயற்பியல் துறை வல்லுநர்கள், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இந்த குழுவின் புரவலர்களோடு சேர்ந்து ஆலோசனை செய்து, இந்த கடிகார நேரத்தில் திருத்தம் செய்து, குறிப்பது பற்றி முடிவு செய்கின்றனர்.இந்த குழுவின் புரவலர்களில் நோபல் பரிசு பெற்ற சாதனையாளர்கள் 15 பேர் உள்ளனர்.உலக முடிவு நாளின் நள்ளிரவுக்கு நெருங்கி அரை நிமிடம் குறைந்தது ஏன்?கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக முடிவு நாள் அடையாள கடிகாரத்தின் நிமிட குறிப்பு, இந்த பேரழிவு நடைபெறும் என்று அடையாளமாக கருதப்படும் நள்ளிரவுக்கு 3 நிமிடங்களுக்கு முன்னர் குறிக்கப்பட்டிருந்தது.ஆனால், 2017 ஆம் ஆண்டு ஏற்படும் உலக பேரழிவு ஆபத்து அதிகமாக இருக்கும் என்று அணு விஞ்ஞானிகளின் இதழ் தெரிவிக்கிறது. எனவே, இந்த அடையாள கடிகாரத்தின் நிமிட முள் அரை நிமிடம் அதிகரித்து குறிக்கப்பட்டுள்ளது.”டொனால்ட் டிரம்பால் தெரிவிக்கப்பட்டுள்ள அணு ஆயுதப் பயன்பாடு மற்றும் பரவலாக்கம் பற்றிய கவலை தரும் கருத்துக்களும், டிரம்ப் மற்றும் அவருடைய அமைச்சரவை நியமன உறுப்பினர்கள் தெரிவித்திருக்கும் பருவகால மாற்றம் பற்றிய ஒட்டுமொத்த அறிவியல் கருத்தொற்றுமையில் நம்பிக்கையில்லாத கூற்றுகளும், உலக அளவில் தோன்றியுள்ள தீவிர தேசியவாதமும் இந்த குழுவின் தீர்மானத்தை பாதித்தன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இரான் அணு ஒப்பந்தம், இணையவெளி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் போலிச் செய்திகளின் அதிகரிப்பு ஆகியவையும் இந்த குழுவின் தீர்மானத்தை பாதித்ததாக அணு விஞ்ஞானிகளின் இதழில் பட்டியலிடப்பட்டுள்ள பிற அம்சங்களாகும்.அச்சுறுத்தல்களை கடந்த ஆண்டுகளோடு எவ்வாறு ஒப்பிடுவது?1947 ஆம் ஆண்டு உலக முடிவு நாள் அடையாள கடிகாரம் உருவாக்கப்பட்டபோது, அந்த இறுதி நாளின் நள்ளிரவுக்கு 7 நிமிடங்களுக்கு முன்னதாக அதன் நிமிட முள் குறிக்கப்பட்டது.அதன் பிறகு உலக முடிவு நாளின் நள்ளிரவில் இருந்து 2 நிமிடங்கள் முன்பாக 1953 ஆம் ஆண்டு குறிக்கப்பட்டது முதல், 17 நிமிடங்கள் முன்பாக 1991 ஆம் ஆண்டு குறிக்கப்பட்டது வரை, மொத்தம் 22 முறை இந்த அடையாள கடிகாரத்தின் நிமிட முள் மாற்றி குறிக்கப்பட்டுள்ளது.பருவகால மாற்றம், அணு ஆயுதப் பரவலாக்கம் ஆகியவற்றால் உலக அளவில் எழுந்த ஆபத்துக்களின் மத்தியில், 2015 ஆம் ஆண்டு இறுதி பேரழிவு நாளின் நள்ளிரவில் இருந்து 5 நிமிட இடைவெளியில் குறிக்கப்பட்டிருந்த இந்த கடிகாரத்தின் முள் 3 நிமிடமாக மாற்றி குறிக்கப்பட்டது.2015 ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து 5 நிமிட இடைவெளியில் இந்த அடையாள கடிகார முள் குறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.முன்னதாக, 1984 ஆம் ஆண்டு அமெரிக்க-சோவியத் உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்ட வேளையில், இந்த அடையாள கடிகார முள் உலக முடிவு நாளின் நள்ளிரவுக்கு 3 நிமிடங்களுக்கு முன்னால் வைத்து குறிக்கப்பட்டது.இப்போது தீர்மானித்திருப்பதை போன்று, ஒரு நிமிடத்திற்கு குறைவான அளவு இந்த அடையாள கடிகாரத்தின் நிமிட முள்ளை மாற்றி குறிக்கும் தீர்மானம் இந்த குழுவால் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்படவில்லை..டொனல்ட் டிரம்ப் சமீபத்தில் தான் அதிபர் பொறுப்பை ஏற்றிருப்பதும், அவருடைய பல அமைச்சரவை நியமன உறுப்பினர்கள் இன்னும் அரசில் இணையாமல் இருப்பதும்தான் இந்த முடிவுக்கு காரணமாகும்.

வடலியடைப்பில் 10 நாள் சிசு மீட்பு!

யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு!பிறந்து 10 நாட்களேயான ஆண் சிசு ஒன்று யாழ்ப்பாணம் வடலியடைப்பு பகுதியில் மீட்கப்பட்டது. அட்டைப் பெட்டிக்குள் கிடத்தப்பட்ட நிலையிலேயே குறித்த சிசுவை அப்பகுதி மக்கள் மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை இளவாலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சிசுவை தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். தற்போது அச்சிசு ஆரோக்கியமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

குத்துச்சண்டை வீரர் முகமது அலி காலமானார்!

பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி காலமானார்.அவருடைய வயது 74.அதிக எடைப்பிரிவில் மூன்று முறை உலகப்பட்டங்களை வென்றுள்ள முகமது அலி கடந்த வியாழன் அன்று சுவாச பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.கடந்த 1984ல் பார்கின்சன்ஸ் நோயினால் அவர் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.அதன் பிறகு 4 ஆண்டுகள் கழித்து அவர் ஓய்வு பெற்றார்.அமெரிக்காவின் தென் பகுதி மாகாணமான கென்டக்கியில் முகமது அலி பிறந்தார். அவருடைய இயற் பெயர் காசியஸ் க்ளே.1964ல் தன்னுடைய முதல் உலக பட்டத்தை வென்றவுடன் இஸ்லாத்திற்கு மதம் மாறினார்.

யேசுநாதர் இந்துத்தமிழர்!புத்தகத்தால் சர்ச்சை!

தெய்வமான ஏசு கிறிஸ்து, பிறப்பால் தமிழர் என்றும், கருப்பு நிறம் கொண்டவர் என்றும், அவர் சிவ பெருமானை தியானித்து சமாதி நிலைக்கு சென்ற ஒரு சித்தர் எனவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான கணேஷ் தாhttps://i0.wp.com/thesamnet.co.uk/wp-content/uploads/2011/06/jesus_with_ciga.jpgமோதர் சாவர்கர் Christ Parichay என்ற புத்தகத்தில் எழுதியிருந்தார். 1946ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த புத்தகம் மராத்தி மொழியில் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில் சர்ச்சை வெடித்துள்ளது.சாவர்கர் நேஷனல் மெமோரியல் என்ற அமைப்பு, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்களின், கொள்கை, கோட்பாடு, இலங்கியங்களை பாதுகாத்து வருகிறது. இவ்வமைப்புதான், வரும் 26ம் தேதி Christ Parichay புத்தகத்தின் மராத்தி மொழியாக்கத்தை வெளியிட உள்ளது. இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பல அம்சங்கள் புதிய தகவல்களை தெரிவிப்பதை போல இருப்பினும், கிறிஸ்தவர்கள் இதுவரையில் நம்பிக்கொண்டிருக்கும் தகவல்களுக்கு எதிரானதாக உள்ளது.இந்த புத்தகம் தமிழகத்தோடு ஏசுகிறிஸ்துவுக்கு இருந்த நெருங்கிய தொடர்பை விவரிக்கிறது. புத்தகத்திலுள்ள முக்கிய அம்சங்களை பாருங்கள்: ஏசு கிறிஸ்துவின் நிஜப்பெயர் கேசவ் கிருஷ்ணா. தமிழ்தான் அவரது தாய் மொழி.ஏசு கிறிஸ்து இயல்பில், தமிழகத்து இந்துக்களை போல கருப்பு நிறம் கொண்டவர். தச்சு தொழில் செய்யும் ஆசாரி குலத்தில் பிறந்தவர். இருப்பினும் அந்த ஜாதி விஸ்வகர்மா பிராமணர் ஜாதி என்றே அழைக்கப்படுகிறது. ஏசுவின் 12வது வயதில் அவருக்கு பூணூல் போடும் சடங்கு நிறைவேற்றப்பட்டது.ஏசு கிறிஸ்துவின் தந்தை பெயர் சேசப்பன். அதுதான் காலப்போக்கில் திரிந்து சேஷப் என்றும், பிறகு, ஜோசப் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. தமிழும், சமஸ்கிருதமும் அக்காலத்தில் உலகின் ஆதி மொழிகளாக இருந்தன.ஜெருசலேம், அரபு நாடுகள் அமைந்துள்ள பகுதிகளில் வசிப்போருக்கு தமிழ் தாய் மொழியாக இருந்தது. இப்போதும்கூட அரபு மொழிகளில் தமிழின் ஆதிக்கம் இருப்பதை உணர முடியும். அப்படித்தான் பாலஸ்தீன் பகுதியில் பிறந்த ஏசுவுக்கும் தமிழ் தாய் மொழியாக இருந்தது. அவர் இந்தியாவுக்கு வந்து யோகா பயின்றிருந்தார்.ஏசுவை சிலுவையில் அறைந்த பிறகும், தனது யோகத்திறமையால் உயிரோடு இருந்தார். அவை சக தோழர்கள் மீட்டு, சித்த வைத்திய முறையில், சிலுவை காயங்களை குணப்படுத்தினர். இறுதி காலத்தில், இமயமலை பகுதியில், ஏசு, லிங்க வடிவத்தில் சிவபெருமானை நோக்கி தியானம் செய்து வந்தார்.3 வருட கடும் தவத்திற்கு பிறகு ஏசுவுக்கு, சிவபெருமான் காட்சியளித்து முக்தியை அளித்தார். பல்வேறு பகுதிகளி்ல இருந்தும் சாதுக்களும், முனிவர்களும் அங்கு வந்து ஏசுவை தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டனர். ஏசுவை ஈஷாநாத் என்றே முனிவர்கள் அழைத்தனர்.ஏசு தனது 49வது வயதில், இந்த ஜட உடலை விட்டுச் செல்ல முடிவு செய்தார். இதன்பிறகு ஆழ்நிலை சமாதி நிலைக்கு சென்று, ஏசு தனது உயிரை துறந்து முக்தியடைந்தார். இப்போதும், காஷ்மீரில் ஈஷாநாத் என்ற பெயரில் அவர் ஜீவமுக்தியடைந்த சமாதி உள்ளது.கிறிஸ்தவம் என்பது தனி மதம் கிடையாது. இந்து மதத்தின் ஒரு அங்கமே கிறிஸ்தவம். பைபிள் ஏசு கூறிய வார்த்தைகள் கிடையாது. இவ்வாறு அந்த புத்தகம் விவரிக்கிறது. இதற்கு ஆதாரமாக பல நூல்களை எடுத்துக்காட்டுகிறதுஇதுகுறித்து, சுதந்திர வீரர் சாவர்கர் தேசிய நினைவகத்தின் செயல் தலைவர் ரஞ்சித் சாவர்கர் கூறுகையில், 70 வருடம் கழித்து புத்தகத்தை பப்ளிஷ் செய்வதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. புத்தகம் குறித்து சர்ச்சை எழும் என எனக்கும் தெரியும். ஆனால், இது புதிது கிடையாது. ஏற்கனவே எழுதியுள்ள புத்தகத்தைதான் மராத்தியில் வெளியிடுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதனிடையே மும்பையை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள், புத்தகத்திலுள்ள அம்சங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளன. பாதிரியார் வார்னர் டிசோசா கூறுகையில், கிறிஸ்தவர்கள் மத நம்பிக்கையை இந்த புத்தகம் அசைக்காது என்றும், யூகத்தின் அடிப்படையில் புத்தகம் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.