வடலியடைப்பில் 10 நாள் சிசு மீட்பு!

யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு!பிறந்து 10 நாட்களேயான ஆண் சிசு ஒன்று யாழ்ப்பாணம் வடலியடைப்பு பகுதியில் மீட்கப்பட்டது. அட்டைப் பெட்டிக்குள் கிடத்தப்பட்ட நிலையிலேயே குறித்த சிசுவை அப்பகுதி மக்கள் மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை இளவாலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சிசுவை தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். தற்போது அச்சிசு ஆரோக்கியமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டமொன்றை இடுக