சென்னையில் காணாமல் போன மகன் மீட்பு!

இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக சென்னை வாழ் இலங்கைத் தமிழர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த தனது 12 வயது மகனை அவனது தந்தையார் பொலிசாரின் உதவியுடன் மீட்டுள்ளார்.paithranகுறித்த சம்பவம் தொடர்பில் தமிழக ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 44). என்ற ஈழத் தமிழரான இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். மனைவி இறந்து விட்டார்.இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக குறித்த சிவபாலன், சென்னை வாழ் இலங்கைத் தமிழர் ஒருவரிடம் தனது மகன் ஒருவனை ஒப்படைத்திருந்தார்.இதன்போது குறித்த சிறுவன் காணாமல் போய்விட்டதாக சென்னை வாழ் இலங்கைத் தமிழர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில்,சிவபாலன்,  தனது 12 வயது மகனை மீட்டுத் தரும்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 23ஆம் திகதி புகார் அளித்தார்.இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க பொலிசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்படி, நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. பொலிசார் இலங்கை தமிழர் அதிகமாக வாழும் பல்வேறு பகுதிகளில் பவித்திரன் எனும் குறித்த சிறுவனைத் தேடினர்.இறுதியில், முகப்பேரில் ஜெயலட்சுமி என்பவர் இருப்பதைக் கண்டு பிடித்தனர். அவர் பொலிசாரிடம் ஒரு முகவரி கொடுத்து விட்டு மற்றொரு முகவரியில் வசித்து வந்துள்ளார்.இந்தநிலையில் பவித்திரன் தனது மகன் என்று கூறி அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் சேர்த்துள்ளார். தற்போது, அவன் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து பொலிஸார் பவித்திரனை மீட்டு சிவபாலனிடம் ஒப்படைத்தனர். 45 நாள் தேடுதலுக்கு பிறகு மகனை மீட்டுக் கொடுத்த பொலிசாருக்கு சிவபாலன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

பின்னூட்டமொன்றை இடுக