அதிசயம்.. மனித ரூபத்தில் ஆட்டுக்குட்டி!

Lamb in human form near Trichyஅதிசயம் ஆனால் உண்மை… மனித ரூபத்தில் ஒரு ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. வேறு ஏதோ ஒரு நாட்டில் இல்லை. நம்ம திருச்சிக்கு பக்கத்துலதான். துறையூரை அடுத்த நல்லவண்ணிபட்டி என்ற கிராமம் உள்ளது. நேற்று அதிகாலை ஆடு ஒன்று குட்டியை ஈன்றெடுத்தது. ஆனால் அந்த குட்டி ஆடுபோல இல்லை. அது மனித வடிவத்தில் பிறந்துள்ளது. இப்படி ஒரு அதிசய ஆட்டுக்குட்டி பிறந்திருப்பதை பார்க்க சுற்றுவட்டார ஊர்ஜனங்களே ஒன்று திரண்டு ஓடிவந்தனர். செல்போனில் ஆர்வத்துடன் படம் எடுத்துக் கொண்டனர். அனைவர் முகத்திலும் பயமும் அதிர்ச்சியும் மாறி மாறி வந்ததே தவிர ஒருவரும் மகிழ்ச்சியடையவில்லை. சில பேர் அந்த ஆட்டுக்குட்டியை பரிதாபமாக பார்த்தனர். சில பேர் பார்த்த அடுத்த வினாடியே, பார்க்காமல் தவிர்த்து ஓடி வந்துவிட்டனர். கடைசியில் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அந்த அதிசய ஆட்டுக்குட்டி இறந்தேபோய்விட்டது.

பின்னூட்டமொன்றை இடுக