பிரிவும் சந்திப்பும்!

எம் நாட்டின் பிரச்சனையால் நாட்டுக்குள் இடம்பெயர்ந்தவர்களும் நாட்டை விட்டு புலம் பெயர்ந்தவர்களு1053372_818940418197784_5437554891766222598_oம் இலட்சக்கணக்கில் உள்ளனர்.நானும் இடம்பெயர்ந்தும் புலம்பெயர்ந்தும் பல ஆண்டுகள்  ஆகிவிட்டன.இந்த இடப்பெயர்வுகளால் நாம் பிரிந்ததும் இழந்ததும் ஏராளம்.இந்த நிலையில் ஒரு திருமண விழாவில் ஊரவர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.உறவுகளுக்கே உறவுகளை தெரியாத நிலையையும் நண்பர்களுக்கே நண்பர்களை தெரியாத நிலையையும் அயலவர்களுக்கே அயலவர்களை தெரியாத நிலையையும் காண முடிந்தது.நானும் பல வருடங்களின் பின் எனது பள்ளிக்கூட நண்பியை சந்தித்துக் கொண்டது விபரிக்க முடியாத ஒரு மகிழ்ச்சியை கொடுத்தது.நானே சிலரை சந்தித்து அறிமுகப்படித்திக் கொண்டதும்,சிலர் வந்து தங்களை எனக்கு அறிமுகப்படுத்திக் கொண்டதும் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது.எம் ஊரவர்களை பல வருடங்களின் பின் சந்தித்து அறிமுகப்படுத்தும்போது ஒவ்வொருவரின் முகங்களிலும் சோகங்கள் இழையோடியதை காண முடிந்தது.எம்மை எல்லாம் இணைக்கும் பாலமாக சமூக வலைத்தளங்கள் இருப்பது ஒரு வகையில் சந்தோஷமே!மறவோம் சந்திப்போம்.

பின்னூட்டமொன்றை இடுக