தாடி முளைத்த பெண்!

Evening-Tamil-News-Paper_47533380986இங்கிலாந்தில் உள்ள பெர்க்ஷயர் என்ற இடத்தில் வசித்து வரும் சீக்கிய தம்பதியின் மகள் ஹர்னாம் கவுர் (23). இவர் மற்ற பெண்களில் இருந்து மாறுபட்ட தோற்றம் கொண்டவராக காட்சியளிக்கிறார். ஹர்னாம் கவுர் சிறுவயது முதலே ஆண்களைப் போலவே முகத்தில் தாடி, மீசை, மார்பு பகுதியில் முடி என வளரத் தொடங்கியது. பெற்றோர் ஹர்னாம் கவுரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஹர்னாம் கவுருக்கு கருப்பையில் கட்டி காணப்பட்டது. இதனால் அவருக்கு ஹார்மோனில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உடலில் ஆண்களை போல முடி முளைத்துள்ளது என்று தெரிவித்தனர்.அக்கம் பக்கத்தினர் கேலி பேச்சும், சக தோழிகளின் கிண்டல் பேச்சாலும் ஆரம்பத்தில் மனம் நொந்து வாரத்திற்கு இரண்டு முறை ஷேவிங் செய்து வந்தார். பின்னர் அவரது பெற்றோர் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அதன் ஐதீகத்தின் படி உடலில் வளரும் முடியை வெட்டக் கூடாது என்ற நம்பிக்கை காரணமாக ஷேவிங் செய்வதை நிறுத்திக் கொண்டார். தற்போது இளவயது பெண்ணாக மாறிவிட்ட ஹர்னாம் கவுர் கூறுகையில்,எனக்கு தாடி, மீசை வளர்ந்தாலும் நான் இப்போதும் நான் என்னை கூடுதல் பெண்மை தன்மையுடன் தான் உணர்கிறேன். எனக்கு தாடி மீசை இருப்பதை பற்றி வருத்தம் எதுவும் இல்லை. எங்களது சம்பிரதாயத்தின்படி அதனை நான் விரும்பு கிறேன். கடவுள் என்னை இப்படி படைத்ததற்காக நான் மகிழ்ச்சியே அடைகிறேன். ஏன் சில மர்ம நபர்கள் கொலை மிரட்டல் கூட விடுத்துள்ளனர். தற்போது எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை என்கிறார் உறுதியான மனதுடன்.

பின்னூட்டமொன்றை இடுக