இளமை இரசனை!

சில நினைவுகள் என்றும் இனித்துக்கொண்டே இருக்கும்!ஒரு நாள் நடந்த சுவாரசியச் சம்பவம் இப்பொழுதும் இனிக்கிறது.அன்று அச்சகத்தில் இரவுப்பணியில் ஈடுபட்டிருந்தோம்.அன்றைய இரவில் நான் ஒரு கவிதையை எழுதி மறு நாள் காலையில் வேலைக்கு வரும் நண்பியின் மேசையில் வைத்து விட்டேன்,மறு நாள் வேலைக்கு எல்லோரும் வந்து சேர்ந்தனர்.பின்னர் என்னிடம் வந்த நண்பி அந்தப்பொறுக்கி கவிதை எழுதி என் மேசையில் வைத்திருக்கிறான் என்றார்.யார் அது என்று நான் கேட்டேன்.அவாவை லவ் பண்ணுவதாக ஒருவன் கூறி வந்தான்.அவனைக்காட்டி அவன்தான் என்றார்.இல்லை இல்லை நான்தான் எழுதி வைத்தேன் கவிதை எப்படி என்றேன்.உடன் தன் இருப்பிடத்திற்கு சென்றவர் கசக்கி எறிந்த கவிதையை எடுத்து வாசித்து விட்டு நன்றாக இருக்கிறது என்றார்.மறக்குமா நெஞ்சம்?

பின்னூட்டமொன்றை இடுக